LATEST ARTICLES
தனியுரிமை மீறலும், பொதுநலனுக்காக வாதாடுதலும்! – விஜய்-சங்கீதா மணமுறிவு மீதான சமஸ் கட்டுரையை முன்வைத்து… – ர. முகமது இல்யாஸ்
விஜயின் தனிப்பட்ட குணம், அவரது அரசியல் தகுதி, அவரது தனிப்பட்ட உறவுகள், ஒரு கணவராக அவரின் நடத்தை முதலான எதையும் பேசுவதற்கு முன்பு, இந்த விவகாரத்தில் நாம் எதைப் பேசுபொருளாக்கி இருக்க வேண்டும்? ஒரு பெண் தன்னுடைய அந்தரங்க வாழ்க்கையை நீதிமன்றத்தில் முறையிடுகிறார்; மூடிய அறை விசாரணை (In-camera proceedings) கேட்டிருக்கிறார்; ஊடகங்கள் தமது தனிப்பட்ட விவகாரத்தை விவாதிக்க தடை கோரியிருக்கிறார். அப்படியும் அவரது அந்த தனிப்பட்ட சட்ட ஆவணம் கசியவிடப்படுகிறது. ஊடகங்களும் அதனைப் பேசுபொருளாக்கியிருக்கின்றன. ஏதோவொரு செய்தியாக அல்லாமல், அது எத்தகைய செய்திகளாக/Contentகளாக மாறியது என்பது அனைவருக்கும் தெரிந்தது.
Young bodies, Old Heroes – ர. முகமது இல்யாஸ்
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் மீண்டும் இணையும் திரைப்படம் தமிழ் சினிமாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதன் டீசரில் இடம்பெற்றிருக்கும் இளம்பெண்கள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், 70 வயதைக் கடந்த நாயகர்களின் ஆண்மையையும், அவர்களின் மீதான ஈர்ப்பு குறையவில்லை என்பதை உணர்த்துவதற்காகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
’ஜன நாயகன்’ Vs சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ – தமிழ்நாட்டின் ‘Barbenheimer’ சூழல்! – ர. முகமது இல்யாஸ்
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ மற்றும் மற்றொரு பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் ‘பார்பீ’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி, சர்வதேச அளவில் பெரும் கலாச்சார உரையாடல்களை உற்பத்தி செய்தன. இரு திரைப்படங்களின் தலைப்பையும் கலந்து 'Barbenheimer' என்ற சொல் உருவாக்கப்பட்டு இணையத்தில் ஒரு கலாச்சார நிகழ்வாக கருதப்பட்டது. அடிப்படையில் இரு நேரெதிர் அரசியல், கலாச்சாரப் பிரதிகள் ஒரே நாளில் வெளியாகி மோதிக் கொள்வதும்,...
‘பைசன் காளமாடன்’: வன்முறை, இணக்கம், ‘நல்ல தேசியம்’ குறித்த விமர்சனங்கள் – மு. அப்துல்லா
மாரி செல்வராஜ் முதல் படமான ’பரியேறும் பெருமாள்’, மணிரத்னம் தனது சரக்கு மொத்தமும் தீர்ந்து, பல்வேறு நடிகர்களை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்ற மார்க்கெட்டை தொடங்கிய ’செக்க சிவந்த வானம்’ ஆகிய இரண்டும் ஒரே நாள் இடைவெளியில் வெளியாகின. தமிழ் சினிமா திரைமொழியில் மணிரத்னத்திற்கு முக்கிய பங்குண்டு. குறிப்பாக, அரசியல் படங்களைத் திறம்பட அவர் கையாண்ட முறை இன்று பேசும் குறியீட்டு அழகியலுக்கெல்லாம் முன்னோடி. ’ரோஜா’, ’இருவர்’, ’உயிரே’ போன்ற படங்களில் மணிரத்னத்தின் அரசியல் நிலைப்பாடுகள் நாம் அறிந்தவை. அதே நேரத்தில்,...
சங்கரபுரமும், வணத்தியும்: ’இட்லி கடை’ மற்றும் ’பைசன்’ திரைப்படங்கள் கட்டமைக்கும் ’கிராமம்’ எனும் வெளி! – அருண் பிரகாஷ் ராஜ்
தலித்திய நோக்கில் இருந்து காந்தியின் மீது முன் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று, அவர் காலனியம் அறிமுகம் செய்த நவீனத்திற்கு மாற்றாக இந்திய கிராமங்களின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளையே தான் உருவாக்க விரும்பும் ராம ராஜ்ஜியத்திற்கு முன் மாதிரியாகக் கொண்டிருந்தார் என்பது. கிராமங்களைப் பற்றிய இத்தகைய கண்ணோட்டத்தை இந்தியாவைச் சுற்றி பல முறை மேற்கொண்ட பயணங்களில் இருந்து மட்டும் காந்தியார் உருவாக்கிக் கொள்ளவில்லை. மாறாக, கிராமங்களை இந்தியாவின் ‘ஆன்மா’வாகவும், அவை பல நூற்றாண்டுகளாக எந்த மாற்றங்களையும் சந்திக்காத, கலப்படமற்ற வெளியாகவும்...
























